‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி முதல் வாரத்தில் வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்து, ஆதிபராசக்தி போல மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
நமீதா மாரிமுத்து போட்டோஷூட்:
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகா இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது தான். ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், அதில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில் முதன்முறையாக களமிறங்கிய திருநங்கை போட்டியாளர் தான் நமீதா மாரிமுத்து.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த யாஷிகா ஆனந்த் – போட்டியாளர்கள் உற்சாகம்!
அவர் ஒரு மாடல் மற்றும் சமூக ஆர்வலர் கூட, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அவருடைய வாழ்க்கை கதையை கேட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனால் அவர் தனிப்பட்ட காரணத்தால் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான சரியான காரணம் தற்போது வரை தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி பின் சமூக சேவைகளை அவர் செய்து வீடியோ பதிவிட்டார். மேலும் பல மாடல் போட்டோஷூட்களை அவர் எடுத்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் பிரசாத் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!
அந்த வகையில் இந்து கடவுள் ஆதிபராசக்தி போல மேக்கப் போட்டு அவர் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் அச்சு அசலாக அவர் ஆதிபராசக்தி போல அவர் இருக்கிறார். தெய்வீக கான்செப்டில் எடுத்த போட்டோஷூட் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் இந்த மேக்கப் போட அவர் எடுத்த கஷ்டங்கள் வெளிப்படையாக தெரிகிறது. திருநங்கைகளை ஒதுக்கும் இந்த சமூதாயத்தில் அவருடைய இந்த கான்செப்ட் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.