திருநங்கைகளின் கஷ்டங்களை சொல்லும் நமீதா மாரிமுத்து – “பிக்பாஸ் சீசன் 2” முதல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் நான்காவது நாளான இன்று நடைபெறும் காட்சிகள் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று லக்ஸரி பட்ஜெட் டாஸ்குகள் நடைபெறுகிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்ல வேண்டும். மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு கதை பிடித்திருந்தால் அவர்கள் லைக்குளையும், இதயங்களையும் கொடுக்கலாம். அவர்கள் கதை பிடிக்காமல் இருந்தால் டிஸ்லைக் கொடுக்கலாம்.
இந்நிலையில் முதலில் இசைவாணி பேசினார். அதன்பின் நேற்று இமான் அண்ணாச்சி பேசினார். அப்போது நிரூப் சிரித்தார் என சண்டை நடந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் யார் பேச இருக்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் திருநங்கை நமிதா மாரிமுத்து பேசுகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் உடல்நிலை மாற்றத்தை உணர்ந்த போது அதை அவர் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்லி அழுகிறார்.
பண மோசடி கும்பலை தேடி அலையும் எழில் , கோவத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
அவரது பெற்றோர் அவரை கண்டபடி அடித்தார்களாம். என் அம்மா சொல்லி சொல்லி வளத்தார்கள், நம்ம வாழ்க்கையில் மற்றவர்கள் மீது குறை இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆனால் என்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் என்னை அடித்த அடியில் என் உடம்பு மரத்து போனது என சொல்லி அழுகிறார். பின் திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்கள், அதற்கு காரணம் பெற்றோர்கள் தான் அவர்கள் மாற வேண்டும் என அழுது கொண்டே சொல்கிறார்.