சென்னை வாசிகள் கவனத்திற்கு – இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas!! அனுமதித்த மாநகராட்சி!
நாட்டில் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இத்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி அனுமதி அளித்து, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
எரிவாயு இணைப்பு:
நாட்டில் தற்போது குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரன்ட் கியாஸ் என்ற நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சென்னையில் இருக்கும் சாலைகள் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பட்டது.
தமிழகத்தில் பிப். 18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அப்டேட்!
Follow our Instagram for more Latest Updates
அதனால் இந்த திட்டத்துக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதில் மற்ற நிறுவனங்களின் கேபிள்கள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றிக்கு Gas குழாயின் புதை வடம் அமைக்கும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பாலங்கள், கல்வெட்டுகள், போக்குவரத்து ஆகியவற்றிருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் Gas வழங்கும் திட்டத்திற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து அரசிடம் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அரசு அனுமதி அளிக்கும் என்று கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download