தமிழகத்தில் பிப். 18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அப்டேட்!

0
தமிழகத்தில் பிப். 18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - வெளியான அப்டேட்!
தமிழகத்தில் பிப். 18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - வெளியான அப்டேட்!
தமிழகத்தில் பிப். 18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அப்டேட்!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப். 18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களில் உள்ள காலியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வார்கள். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் பிப். 18 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெற கட்டுப்பாடு நீக்கம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

அதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்க இருக்கின்றன. இந்த முகாம் பாவை பொறியியல் கல்லூரியில் பிப். 18 காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெற இருக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் காலிப்பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 10000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!