விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை – அடுத்து வரப்போகும் திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் குடும்ப பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில் முல்லை கர்ப்பமாக இருப்பது போல அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு கூட்டு குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இந்த சீரியலில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகள் சிறிய மளிகை கடையை வைத்து எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வருகின்றனர் என்பது பற்றியும் குடும்பத்தில் அனைவரும் எப்படி விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பது பற்றியும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
முல்லை குழந்தை வேண்டும் என்ற கனவுடன் இருக்க ஆனால் மருத்துவ பரிசோதனையில் இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவு என வருகிறது. ஆனால் அந்த உண்மையை கதிர் மறைத்து இருக்கிறார். அந்த ரிப்போர்ட்களை யாரும் பார்க்க கூடாது என்பதால் அதை பீரோவில் வைத்து மறைத்து இருக்கிறார். இந்நிலையில் முல்லை மற்றும் குடும்பத்தினருக்கு அடுத்து வரும் எபிசோடுகளில் உண்மை தெரிய போகிறது. அதனால் குடும்பத்தில் அனைவரும் சோகமாக இருக்க, மீண்டும் மருத்துவமனைக்கு தனம் போக சொல்கிறார்.
அதன் பின் முல்லைக்கு தேவையான மருத்துவம் பார்க்கப்பட்டு முல்லைக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. அதனால் குடும்பத்தில் மீண்டும் பழைய சந்தோசம் வர போகிறது, ஏற்கனவே வீட்டில் ரூம் பிரச்சனை இருக்கும் நிலையில் அதை எல்லாம் மறந்து சந்தோசமாக இருந்து வருகின்றனர். ஆனால் இன்றைய எபிசோடில் பாண்டியனுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதால் தனத்தின் அம்மா மீண்டும் பழைய பிரச்சனையை கொண்டு வருகிறார். இது எங்கே சென்று முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.