‘மௌனராகம் 2’ சீரியலில் தருணை மிரட்டி காதலிக்க சொல்லும் சுருதி – ப்ரோமோ ரிலீஸ்!
மௌனராகம் சீரியலில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது ஒரு புதிய திருப்பம் வர உள்ளது. தருண் சத்யாவை காதல் செய்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவதாக சுருதி மிரட்டுகிறார்.
மௌனராகம் 2:
விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியல்கள் மட்டும் தான் அடுத்தடுத்த சீசன்களாக எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சீரியல்களை போல் மௌனராகம் சீரியலின் முதல் சீசனிலும் கதை களம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு சுவாரஸ்யமாக சென்று வந்தது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மீண்டும் மௌன ராகம் சீசன் 2 தொடங்கப்பட்டது. முதல் சீசனில் குழந்தைகளாக இருந்த சக்தி மற்றும் சுருதி இருவரும் வளர்ந்து தங்கள் திருமண வயதை அடைந்து விட்டது போல் கதை தொடங்கப்பட்டது. இந்த முறை சக்தி தனது பெயரை சத்யா என்று மாற்றி உள்ளார்.
ஐபிஎல் 15-வது தொடரில் புதிதாக களமிறங்கும் இரு அணிகள் – பிசிசிஐ செயலாளர் தகவல்!
தான் சக்தி என்பது தெரியவந்தால் தேவையில்லாமல் பல பிரச்சனைகள் எழும் என்பதால் சத்யா என்ற பெயரை வைத்துக் கொண்டார். ஆனாலும் காதம்பரி மற்றும் சுருதிஇருவருக்கும் சத்யாவை பிடிக்கவில்லை. இந்நிலையில், தருண் என்பவர் சத்யாவை காதலிக்கிறார். சுருதியும் தருணை காதலிக்கிறார். எதிர்பாராத விதமாக தருணின் அப்பா தனது மூத்த மகன் வருணுக்கு சத்யாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார். இதனால் தருண் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.
ஆனால் சுருதியை காதலிக்க மறுக்கிறார் தருண். இதனால் கோவமான சுருதி தருணை அழைத்து தன்னை காதலிக்கிறீர்களா இல்லையா என்று கேட்கிறார். தருண் இல்லை என்று சொல்லியதும், உனக்கு வேறு வழியே இல்லை நீ என்ன தான் காதலிச்சு ஆகணும். இல்லைனா நா நேர உன் வீட்டிற்கு சென்று நீ சத்யாவை காதலித்த விஷயத்தை அனைவரிடமும் சொல்லி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.