தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை – தகுதிகள் என்ன? விரைவில் அரசாணை!

0
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை - தகுதிகள் என்ன? விரைவில் அரசாணை!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை - தகுதிகள் என்ன? விரைவில் அரசாணை!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை – தகுதிகள் என்ன? விரைவில் அரசாணை!

தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மகளிருக்கான உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிமைத் தொகை பெறுவற்கான தகுதிகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

உரிமைத் தொகை:

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களுக்கு குற்றம் சாட்டி வந்தனர்.

தமிழகத்தில் ஏப் 21 ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் – ஆய்வு கூட்டத்தில் முடிவு!

விரைந்து குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரூ. 1000 உரிமைத்தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான ரூ. 1000 உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இத்திட்டத்திற்காக அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!