பாதுகாப்பு அமைச்சகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
Ministry of Defence ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Civil Motor Driver, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Ministry of Defence |
பணியின் பெயர் | Civil Motor Driver, Multi Tasking Staff |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | With in 30 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாதுகாப்பு அமைச்சகம் பணியிடங்கள்:
பாதுகாப்பு அமைச்சகத்தில் (Ministry of Defence) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Civil Motor Driver – 05 பணியிடங்கள்
Multi Tasking Staff – 02 பணியிடங்கள்
கல்வி விவரம்:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Ministry of Defence வயது விவரம்:
30.06.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Civil Motor Driver – 18 வயது முதல் 27 வயது வரை
Multi Tasking Staff – 18 வயது முதல் 25 வயது வரை
அரசு செவிலியர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு – சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு!
பாதுகாப்பு அமைச்சக வயது தளர்வுகள்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், அரசு ஊழியர்களுக்கு – 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Ministry of Defence ஊதியம்:
இந்த பாதுகாப்பு அமைச்சக பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது As Per 7th CPC Revised Pay Matrix என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
பாதுகாப்பு அமைச்சக தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ministry of Defence விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்களுக்குள் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.