தமிழகத்தில் கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததும் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை தற்போது வரை நீடிக்கிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு – அரசு உத்தரவு!
முன்னதாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் மேலும் சில தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
TN Job “FB Group” Join Now
அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததும், கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது கோவில்களில் பக்தர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படவில்லை, மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.