கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொல்லிய அமைச்சர் – கல்வி கட்டணம் செலுத்த அவசியம் இல்லை!
தமிழகத்தில் மாணவர்களின் கல்வி எந்த காரணத்தைக் கொண்டும் இடையில் நின்று விடக்கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்வி கட்டணம்:
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் என்பதால் தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயலாக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கல்வி மாணவர்கள் முதல் உயர்கல்வி மாணவர்கள் வரை அனைவரும் தங்களது கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மற்றவர்களையும் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்க வைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடையும் அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், தற்போது உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அமைச்சர் அவர்களே ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சேரும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை அளிக்க வேண்டியது இல்லை. அதேபோல், சில ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் முறையில் மட்டுமே பெறப்பட்டு வருகிறது.
தமிழக மாற்றுத்திறனாளர்களுக்கு உதவித்தொகை – உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
Exams Daily Mobile App Download
திண்டுக்கல் அரசு கல்லூரியில் ஆன்லைன் விண்ணப்பத்தினை அளிக்காத மாணவர்கள் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும் அமைச்சர் வழி செய்துள்ளார். இதனால் முன்னதாக இணையத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்யாத மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்லூரி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்