தமிழகத்தில் 1,6 & 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கை & கல்விக்கட்டணம் வசூல் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1, 6, 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட பின்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். மேலும் கல்விக்கட்டணத்தை இரண்டு தவணையாக செலுத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்வியாண்டு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 & 14 மளிகை பொருட்கள் – இன்று முதல் விநியோகம்!
கொரோனா காரணமாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், 27 மாவட்டங்களில் 1, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட பின்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
கொரோனா காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதனால் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. தனியார் பள்ளிகள் 70 சதவிகிதம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு தவணையாக வசூலிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.