தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 & 14 மளிகை பொருட்கள் – இன்று முதல் விநியோகம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 & 14 மளிகை பொருட்கள் - இன்று முதல் விநியோகம்!
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 & 14 மளிகை பொருட்கள் - இன்று முதல் விநியோகம்!
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 & 14 மளிகை பொருட்கள் – இன்று முதல் விநியோகம்!

தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 இரண்டு தவணையாக வழங்கப்படும் என்றும் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஜூன் 21க்கு பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

இதை அடுத்து கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் இன்று (ஜூன் 15) முதல் டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது இது குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா இரண்டாம் தவணை நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வருகிற 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவித்தார். எனவே மக்கள் அவசரம் இன்றி பொறுமையாக பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பொருட்கள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை ஆராய தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

அதேபோல் ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்களுக்கு பணம் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வெளி சந்தையில் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அவர்கள் எச்சரித்து உள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா அச்சம் காரணமாக தினசரி 75 முதல் 200 டோக்கன்தாரர்கள் வரை பணம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!