தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவல்? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!
கேரளாவில் புதிதாக பரவி வரும் ஜிகா வைரஸ் தொற்று தமிழகத்திலும் பரவும் வாய்ப்புள்ள நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார்.
ஜிகா வைரஸ்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக பலத்த பாதிப்புகள் ஏற்பட்டு விட்டது. இந்த பாதிப்புகள் தற்போது தான் சற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் இன்னும் பல மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
வங்கிகளில் புதிய IFSC Code மாற்றம் – மத்திய அரசின் வங்கிகள் ஒருங்கிணைப்பு!
அந்த வகையில் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று இன்னும் சில மாவட்டங்களில் அதிகரித்த நிலையில் உள்ள நிலையில் அங்கு ஜிகா என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. தொடர்ந்து பல நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்ட பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து மாநிலத்தில் 18 பேர் இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது டெங்கு காய்ச்சலின் தொடர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்களிடம் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாரும் ஜிகா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பது இறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து, ரயில்கள், லாரிகள் போன்றவற்றில் வரும் மக்களை பரிசோதனை செய்த பிறகு தான் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படும் பணிகள் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.