வங்கிகளில் புதிய IFSC Code மாற்றம் – மத்திய அரசின் வங்கிகள் ஒருங்கிணைப்பு!
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள 10 வங்கிகளை நான்காக மாற்ற புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வங்கிகளில் மாற்றம்:
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் படி, வருமானம் குறைவாக உள்ள வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவித்தது. மேலும் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திட்டச் செலவுக்கான நிதியில் பாதித்தொகை வெளியில் இருந்து பெறப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தவிர, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனில் சில சதவிகித பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – ஜூலை 20க்குள் வெளியீடு!
மேலும் 10 வங்கிகள் ஒருங்கிணைக்கப்படும் என 2019 ஆம் ஆண்டு தெரிவித்தது. அதன் படி வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதால் சில வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி விவரங்களை மாற்றம் செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது IFSC Code குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ்.சி கோடுகள் இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு தேவையான மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.
இந்த சேவை இருந்தால் மட்டுமே இணைய சேவைகளாக நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் ஐ.எம்.பி.எஸ் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் மத்திய அரசின் வங்கி இணைப்பு காரணமாக இந்த சேவைகளை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய வங்கி வாடிக்கையாளர்கள் புதிய பெயரில் வங்கி செயல்பட்டு வருவதால் இனி பழைய ஐ.எஃப்.எஸ்.சி கோடுகளை பயன்படுத்த இயலாது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, தேனா வங்கி, யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேசன் வங்கி ஆகிய வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் புதிய IFSC code பெற்று அதன் மூலமாக பரிவர்த்தனைகளை செய்ய முடியும். புதிய IFSC விவரங்களை பெற வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்வது அல்லது டோல் ஃபிரீ எண்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.