தமிழக பள்ளி மாணவர்களுக்கான அமைச்சரின் அறிவுரை – தகவல் வெளியீடு!
புதிய உலகை படைக்க மாணவர்கள் உலகளாவிய அறிவை பெற வேண்டும். இதனால் மன மாற்றம் ஏற்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள அரசு பள்ளி விழா ஒன்றில் அமல்படுத்தப்பட வேண்டிய திட்டத்தை குறித்து பேசியுள்ளார்.
புதிய முயற்சி:
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியை தொடர்ந்து தமிழகத்தில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆதங்கத்திலும், அவசரத்திலும் தவறான முடிவுகளை எடுத்து தற்கொலைக்கு முயல்கின்றனர். ஏனெனில் தற்போது இருக்கும் மாணவர்களது மன நிலை எப்போ? எப்படி? இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. இதனால் கவுன்சிலிங் தேவையா என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை குறித்து கவலைப்படுகின்றனர். இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அவர்களின் வாசிப்பு திறனையும், படைப்பு திறனையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் வாசிப்பு இயக்க தொடக்க விழா பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இவ்விழா நேற்று நடைபெற்றது. அப்போது இத்திட்டத்தை தொடங்கி வைத்த கல்வித்துறை அமைச்சர் அதன் நன்மைகளையும், இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தும் பேசினார். அதாவது, தற்போது இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் என்று அநேகர் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தமட்டில் தினசரி பாட இடைவேளையில் மாணவர்கள் ஒரு நூல் வீதம் வாசித்து அதை உள்வாங்கினாலே சிறந்த கவுன்சிலிங் ஆக உருமாறி மன மாற்றம் ஏற்படும் என கூறினார்.
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயமா? உங்களுக்காகவே முக்கிய அறிவிப்பு இதோ!
மேலும், 6 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை தனி தனி பிரிவாக மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் வாரம் ஒரு நூல் வீதம் நூலகத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும். அதனை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று படித்து முடித்தவுடன் நூலகத்திற்கு திருப்பி தந்து விட வேண்டும். பின்னர் படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதவோ அல்லது ஓவியம் வரையவோ அல்லது நாடகமும் நடத்தவோ செய்யலாம். இதற்கான மதிப்பீடுகளை ஒவ்வொரு பள்ளியிலும் சேகரிக்கப்பட்டு மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பேர் என்கிற வகையில் 114 பேர் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுக்கலாம்.
மேலும், தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உடன் அந்த குழந்தைகள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அறிவுப்பயணம் என்ற பெயரில் வெளிநாடு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எனவே, புதிய உலகை படைப்பதற்கு முக்கியமான செல்வங்களாகிய மானவர்கள் முதலில் உலக அறிவை பெற வேண்டும். அதற்காக இந்த திட்டம் அவர்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இன்றைய மாணவர்களை நாளைய படைப்பாளியாக மாற்றும் நோக்கத்திலும், மன மாற்றம் கொடுக்கும் எண்ணத்திலும் தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என பேசியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்