இன்று முதல் மினி ஊரடங்கு அமல் – பள்ளி & கல்லூரிகள் மூடல், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
டெல்லியில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று விகிதம் 0.5%க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
தேசிய தலைநகர் டெல்லியில் ஒமிக்ரானின் புதிய வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் ஒரு சிறிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் புதிய வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக, நேற்று (டிச.27) இரவு முதல் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவின் நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இனி தினந்தோறும் இரவு 10 மணிக்கு தொடங்கும். இப்போது டெல்லி அரசாங்கத்தின் திட்டத்தின்படி, மஞ்சள், அம்பர், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நான்கு நிலைகளில் ஒமிக்ரான் பரவலை குறிக்கும் எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2021 சிறந்த டெஸ்ட் வீரர் விருது – தமிழக வீரர் அஸ்வின் பெயர் பரிந்துரை! ரசிகர்கள் உற்சாகம்!
அந்த வகையில் டெல்லியில் ஒமிக்ரான் நோய்த்தொற்று விகிதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 0.5 சதவிகிதம் நேர்மறையாக இருக்கும் போது அல்லது அதைத் தாண்டியதால் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்மறை விகிதத்தை தாண்டும் சூழல் ஏற்பட்டால் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இப்போது மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் வணிக நிறுவனங்கள், பார்கள் மற்றும் உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- இப்போது டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் விதித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி,
- தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத திறனுடன் உணவகங்கள் அனுமதிக்கப்படும்.
- அதே நேரத்தில் பார்கள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை 50% திறனுடன் செயல்படலாம்.
- தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
- டெல்லி அரசு அலுவலக ஊழியர்களில் பாதி பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். - மத ஸ்தலங்கள் திறக்கப்படும் ஆனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் திறக்கப்படலாம்.
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
- அத்தியாவசியமற்ற பொருட்களின் கடைகள், நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும்.
- இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
- திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் 20 நபர்களுக்கு அனுமதிக்கப்படும்.
- அதே வேளையில் சமூக, அரசியல், கலாச்சார, மதம் மற்றும் பண்டிகை நிகழ்வுகள் தொடர்பான அனைத்து வகையான கூட்டங்களும் தடைசெய்யப்படும்.
- டெல்லி மெட்ரோ சேவைகள் இருக்கை திறனில் 50 சதவிகிதம் இயங்கும்.
- அதே நேரத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வண்டிகள் இரண்டு பயணிகள் வரை பயணிக்க முடியும்.
- விலக்கு அளிக்கப்பட்ட பயணிகளுடன் 50 சதவீத திறனில் பேருந்துகள் இயக்கப்படும்.
- இதற்கிடையில் நேற்று (டிச.27) ஒரு நாளில் டெல்லியில் 331 புதிய கொரோனா வழக்குகளுடன் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.
- அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 0.68 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.