தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. இது தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் கடந்த நவம்பர் மாதம் அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. குறைந்த நாட்களில் பாடப்பகுதியை முடிக்க இயலாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனால் அரையாண்டிற்கான விடுமுறை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

மேலும் மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர் அமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. பொதுத்தேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மாணவர் ஒருவர் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022 – இவர்களுக்கு மட்டும் டோக்கன்! முக்கிய அறிவிப்பு!

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை தினங்களில் நேரடி அல்லது ஆன்லைன் வகுப்பு மூலமாகவோ பாடங்களை நடத்த கூடாது என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த விதியை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுமுறை தினத்தை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று புகார் அளித்த மாணவருக்கு ட்விட்டரில் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி அவர்கள் பதிலளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!