கல்வித்துறை வளர்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அமைச்சர் அறிவிப்பு!
கல்வித்துறை வளர்ச்சி மேம்பாட்டிற்காக தமிழக அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம்:
இந்தியாவில் இனிவரும் ஆண்டுகளில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மட்டுமே தகவல் தொழிற்தொடர்பு நிறுவனங்கள் கவனம் செலுத்த இருக்கின்றன. இதனால், தற்போதிலிருந்தே Generative AI, சைபர் செக்யூரிட்டி ஆகிய தொழில்நுட்பத்தில் பயிற்சி பெறும்படி நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியிடமாறுதல் விதிகளில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும், முதல்வர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக TEALS திட்ட தொடக்க விழா நடக்கவுள்ளதாகவும், Technical Education and Learning Suppoort திட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலும், ஏழை மாணவர்களுக்கும் ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பத்தின் பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.