மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் 1900 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பணி நீக்க நடவடிக்கை:
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நீக்க நடவடிக்கைகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி இதனை ஈடு செய்யும் வகையில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது. உலகில் மிகவும் பிரபலமான அமேசான், பிளிப்கார்ட், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் இவற்றில் ஈடுபட்டுள்ளது தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவில் உள்ள 1900 ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக Activision Blizzard நிறுவனத்தை இணைத்த பிறகு கூடுதல் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நீக்க தொடருமா என்று மற்ற ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஆதார் கார்டு மூலமாகவே UPI ஆக்டிவேட் செய்யலாம் – முழு விவரம் இதோ!!