ரேஷன் கார்டு இல்லாத நபர்களுக்கு ரூ.6,000/- நிவாரண நிதி – வங்கி கணக்கில் வரவு!

0
ரேஷன் கார்டு இல்லாத நபர்களுக்கு ரூ.6,000/- நிவாரண நிதி - வங்கி கணக்கில் வரவு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் கார்டு இல்லாத நபர்களுக்கு நிவாரண நிதியான ரூ.6,000/- இன்று வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

வங்கி கணக்கில் வரவு:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இப்பாதிப்பின் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு ரூ.6,000/- நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிவாரண தொகையை ரேஷன் கார்டுதாரர்கள் நியாய விலை கடைகளின் மூலம் பெற்றுக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாதவர்களும் இந்த நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.

HAL நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

இந்த அறிவிப்பின் படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 04 மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் நபர்கள் நிவாரண தொகைக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை கண்டறிய விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அரசு அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களது வங்கி கணக்கில் இன்று (1.3.2024) நிவாரண நிதியான ரூ.6,000/- வரவு செய்யப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!