மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால்..! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை!
இந்தியாவில் ஓரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு அதன் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை
மத்தியில் இரண்டாது முறையாக ஆட்சியமைத்துள்ளதான பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமான பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அதிகளவு வரி விதிப்பதில் முன்னணியாக திகழும் இந்த அரசு இந்தியாவில் வசதி படைத்தவர்கள் தான் பெரும்பான்மையாக இருப்பது போல எண்ணம் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதனால் சாமானிய மக்களின் பிரச்சனைகள் அரசின் கண்களுக்கு தெரிவதில்லை.
Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் – தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!
அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா பேரலை ஓய்ந்து கொண்டிருக்கும் சூழலில் மற்றொரு முக்கிய பிரச்சனையாக பெட்ரோல் விலை அதிகரிப்பு உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலையின் இந்த தினசரி ஏற்றமானது யூகிக்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களிடையே ஒரு அதிருப்தியான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள், உயர்ந்து வரும் பெட்ரோல் விலைக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஆனால் இந்த விலையேற்றத்துக்கு சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் எனவும், முந்தைய அரசு பெற்ற கடனை சீர் செய்யும் பொருட்டு வரி விதிப்பதாகவும் பல்வேறு விதங்களில் மத்திய அரசு விளக்கம் கொடுத்து வருகிறது. இதனிடையே தமிழக அரசு, மக்களின் தேவைகளை முன்னிறுத்தி பெட்ரோல் விலையில் ரூ.3 வரை குறைத்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.