தமிழக பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – அரசு அதிகாரிகள் திட்டம்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை - அரசு அதிகாரிகள் திட்டம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை - அரசு அதிகாரிகள் திட்டம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – அரசு அதிகாரிகள் திட்டம்!

நெல்லை மாவட்ட அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஆன நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனநல ஆலோசனை:

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடத்தை தாண்டி நற்பண்புகளை கற்று தரும் நோக்கில் அரசு சார்பிலும் பள்ளி நிர்வாகம் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு நீதி கதைகள், அறநெறி முறைகள், அகிம்சை போன்றவை கற்பிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஒரு நல்ல சமுதாய அக்கறை உள்ள மாணவனை உருவாக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் இன்று நெல்லை மாவட்டம் களக்காட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் உடன் பயிலும் சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயம்பட்ட மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மோதலில் ஈடுபட்டு மாணவரை தாக்கிய சக மாணவனை காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!