ஜனவரி 2ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நடப்பு மாதம் கிறிஸ்மஸ் மற்றும் ஜனவரி 1ல் புத்தாண்டு போன்ற கொண்டாடட்டங்கள் வர உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
144 தடை உத்தரவு:
முக்கிய தினங்கள் மற்றும் பண்டிகை, திருவிழாக்கள் நடக்கும் சமயங்களில் எதிர் கருத்துக்களை கொண்ட பிரிவினர்களிடையே ஏற்படும் மோதல்கள் மிகவும் அபாயமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் நிகழ இருக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக குறிப்பிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவினை பிறப்பிக்கின்றனர்.
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!
Exams Daily Mobile App Download
இதேபோல், தற்போது உத்தரப்பிரதேசத்தின் கெளதம் புத்த நகரின் மாவட்ட காவல்துறை ஆணையரகத்தின் ஊடக பிரிவு, அடுத்து வர இருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் ஜனவரி 2, 2023 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்த நாட்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தெருக்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.