மேகாலயா மாநில அரசுப் பள்ளிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி அமர்வை பிப். 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி அமர்வு
மேகாலயா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி அமர்வு தொடங்கப்பட இருக்கிறது. இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளும் பள்ளி காலண்டரை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதனை மீறி பள்ளிகள் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி அமர்வு பிப். 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ப்ரீ பிரைமரி வகுப்புகள் நவம்பர் 29 உடன் முடியும் எனவும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை டிசம்பர் 20 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் டிசம்பர் 21 முதல் பிப். 9 வரை குளிர்கால விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால விடுமுறையை தவிர, மாநில அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்கள் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
தமிழக அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!