வங்கிகளில் வட்டி விகிதம் அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0
வங்கிகளில் வட்டி விகிதம் அதிரடி உயர்வு - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வங்கிகளில் வட்டி விகிதம் அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது MCLR விகிதத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

MCLR விகிதம் உயர்வு:

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அவ்வபோது வங்கியின் அடிப்படை MCLR விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதன் வாயிலாக வங்கிகளின் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கிறது. தற்போது SBI அதிக கிரெடிட் மதிப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கான MCLR விகிதத்தை 8.85 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

அடுத்ததாக BOB வங்கி MCLR விகிதத்தை 8.7% ல் இருந்து 8.8% உயர்த்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டியில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி தற்போது கார் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதம் 9.15 ஆக உயர்ந்துள்ளது. இந்த நடவடிக்கையால் வங்கிகளில் கார் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI அதிகரிக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!