ஜூலை 1 முதல் ஜிப்மரில் MBBS வகுப்புகள் – நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதுவை, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜிப்மர்:
கொரோனா இரண்டாவது அலை அச்சம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி தற்போது தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடிய நிலையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஜிப்மர் மையத்தில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆதார் இணைப்பிற்கு செப்டம்பர் 1 வரை கால அவகாசம் நீட்டிப்பு – வருங்கால வைப்பு நிதி!
அதன்படி ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்ததாவது, கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் புதுவை, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் முதலாம் ஆண்டு படிக்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள், பி.எஸ்.சி நர்சிங் பயிலும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்.சி துணை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. மேலும் எம்.பி.பி.எஸ் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும்.
TN Job “FB Group” Join Now
மேலும் ஜிப்மர் மையங்களுக்கு வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசியை வெளியே செலுத்தி இருந்தாலும் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்பே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.