இக்னோ பல்கலை எம்பிஏ, பிஎட் நுழைவுத்தேர்வு – மார்ச் 20 கடைசி நாள்!!
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2021ம் ஆண்டுக்கான எம்பிஏ மற்றும் பிஎட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் வரும் மார்ச் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்:
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமானது இந்திய தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகமாகும். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றிய பின்னர் 2000 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது.
பிரதமரின் ‘பரிக்ஷா பெ சர்ச்சா’ கலந்துரையாடல் – 8.68 லட்சம் மாணவர்கள் பதிவு!!
நுழைவு தேர்வு:
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் பிஎட் படிப்புகளுக்கான 2022ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் நடக்க உள்ளதாக இக்னோ பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குனர் டி.ஆர்.சர்மா அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் எம்பிஏ., பிஎட்., மற்றும் பி.எஸ்சி (செவிலியர்) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஏப்ரல் 11ம் தேதி அன்று நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.
இக்னோ பல்கலையில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளத்தில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் மார்ச் 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்