பிரதமரின் ‘பரிக்ஷா பெ சர்ச்சா’ கலந்துரையாடல் – 8.68 லட்சம் மாணவர்கள் பதிவு!!
பிரதமரின் திட்டம்:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் தேர்வு குறித்த பயத்தினை நீக்கி அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும், மாணவர்களின் சந்தேகங்களை நீக்கும் வகையிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். நாடு முழுவதும் இருந்து மாணவர்களிடம் இருந்து கேட்க வேண்டிய கேள்விகளை அவர்களின் பள்ளியின் முழு விவரங்களுடன் தபால் அட்டையில் பெற்று அவர்களில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அனுமதிப்பார்கள். வழக்கமாக நேரடி முறையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 24 முதல் மாதிரி தேர்வுகள் – அட்டவணை வெளியீடு!!
கொரோனா எதிரொலி:
நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் இருப்பதால் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி பாதுகாப்பானதாக இருக்காது என்று கருதிய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இம்முறை பரிக்ஷா பெ சர்ச்சா திட்டத்தை காணொளி முறையில் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளிடம் பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளிகள் அறிவுறுத்தியது.
நடப்பு ஆண்டு:
2021ம் ஆண்டுக்கான பரிக்ஷா பெ சர்ச்சா திட்டத்தில் இதுவரை 8.68 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 2.25 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 78,000 பெற்றோர்களும் அடக்கம். பரிக்ஷா பெ சர்ச்சா திட்டத்தில் கேள்விகளை novateindia.mygov.in என்ற இணையத்தளத்தில் கேட்கலாம். மாணவர்கள் தங்கள் கேள்விகளை மார்ச் 14ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். 9 முதல் 12 ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பரிக்ஷா பெ சர்ச்சா திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்