தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் – தெளிவுரை வெளியீடு!
தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிலவிய பல்வேறு குழப்பங்களுக்கு தெளிவுரை தற்போது வெளியாகி உள்ளது.
மகப்பேறு விடுப்பு:
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு காலத்தில் அவர்களுக்கு ஓய்வு தேவை. அதனால் அவர்கள் பணிகளுக்கு வர முடியாததால் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது. இந்த மகப்பேறு விடுப்பானது ஊதியத்துடன் வழங்கப்படும். இந்த விடுப்பானது இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே வழங்கப்படும். முதலில் 3 மாத காலங்கள் (90 நாட்கள்) மகப்பேறு விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மகப்பேறு விடுப்பு எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த அரசு ஊழியரின் சொந்த முடிவின் பெயரில் தான் அளிக்கப்படும். அதனை தொடர்ந்து 2015 காலகட்டங்களில் பெண்களின் நலன் கருதி 3 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக (180 நாட்கள்) உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகத்தின் ‘இந்த’ 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
அதன் பின்னர் 2016-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு நாட்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். அதாவது, ஏற்கனவே 6 மாதங்கள் வழங்கப்பட்டது. அதனை 9 மாதங்களாக (270 நாட்கள்) உயர்த்தி அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பினை இன்னும் அதிகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுவாக திமுக ஆட்சி என்றாலே அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்களின் போது பல்வேறு சிறந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் இந்த மகப்பேறு விடுப்பு அதிகரிப்பும் ஒன்று.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!
இதுவரையில் இருந்த 9 மாத மகப்பேறு விடுப்பு நாட்களை 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பின் போது அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த மகப்பேறு விடுப்பானது தொடர்ந்து 365 நாட்களும் எடுத்துக்கொள்ளலாம். இதில் பல்வேறு குழப்பங்கள் எழுந்து வந்துள்ளது. அதாவது தொடர்ந்து விடுப்புகளை எடுப்பதா? நாட்களை பிரித்து எடுக்கலாமா? அவ்வாறு எடுக்காவிடில் விடுப்பு முடிந்து விடுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. மகப்பேறு விடுப்பு 365 நாட்களுக்கு மிகாமல் எடுக்க வேண்டும் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த 365 நாட்கள் விடுப்பினை சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் கருவுற்றது முதல் மகப்பேறு முடிந்த பிறகு வரை எப்படி வேண்டுமானாலும் தங்களது விருப்பம் போல் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.