![தமிழகத்தின் ‘இந்த’ 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை! தமிழகத்தின் ‘இந்த’ 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/தமிழகத்தின்-இந்த-8-மாவட்டங்களில்-இடி-மின்னலுடன்-கனமழை-768x576.jpg)
தமிழகத்தின் ‘இந்த’ 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25.10.2021: தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச் மலையை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி – போக்குவரத்துத்துறை!
26.10.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்கா௫, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 27ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்க நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி – போக்குவரத்துத்துறை!
27.10.2021: தாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்ச மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
28.10.2021,29.10.2021: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுஇகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
27.10.2021,28.10.2021: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 இலோ மீட்டர் வேகத்துடன் வீசக்கூடும்.
மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.