தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முகக்கவசம் கட்டாயமில்லை!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முகக்கவசம் கட்டாயமில்லை!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முகக்கவசம் கட்டாயமில்லை!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முகக்கவசம் கட்டாயமில்லை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மே மாத இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது.

அதனால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். நடப்பு ஆண்டில் குறைவான நாட்களே நேரடி வகுப்பு நடைபெற்றுள்ளதால், தற்போது தான் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அவர்கள் பாதுகாப்புக்காக வேண்டுமென்றால் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!