தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் – அரசு ஆணை வெளியீடு!
தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடும் பணிகள் தொடர்பாக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஆணை:
தமிழகத்தில் கடந்த 2020 – 2021ம் கல்வி ஆண்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தொற்றின் 2ம் அலை பாதிப்பு அதிக வேகத்தில் பரவியதால் மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பின் இறுதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ‘இந்த’ ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதில் விலக்கு – ஆணையர் அறிவிப்பு!
இந்நிலையில் 10, 11ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு அரசு தேர்வுகள் துறை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசின் ஆணையில் 10, 11ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கடந்த மே மாதத்தில் கல்வித்துறை அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மதிப்பெண் சான்றிதழில் 2020-2021ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சான்றளிக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் இருக்கும் இடத்தில் தேர்ச்சி என்று பதிவு செய்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குனரின் கருத்தை அரசு ஏற்று அதன்படியே மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்குமாறு ஆணையில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையின் படி 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது.