திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மார்ச் மாத டிக்கெட் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் மார்ச் மாதத்திற்கான 300 ரூபாய்க்கான தரிசன டிக்கெட் இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 15,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
டிக்கெட் விநியோகம்:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். தற்போது இலவச தரிசன நேரடியாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி தினசரி 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியின் மூன்று இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி தரிசன சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. . கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் தற்போது 2500 ரூபாயாகவும், வஸ்திரம் அலங்கார சேவைக்கான கட்டணம் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் மார்ச் மாதத்திற்கான 300 ரூபாய்க்கான தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் கூடுதல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
வழக்கமாக 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை முதல் கூடுதலாக 13,000 டிக்கெட்கள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் தினமும் 15,000 இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வருகிற 26ம் தேதி முதல் 28-ந் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் விற்பனை செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.