TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேதியியலர் பதவிக்கான தேர்வினை மார்ச் 19ம் தேதி அன்று நடத்த உள்ளது. தற்போது இதற்கான தேர்வு மையத்தை பற்றி ஒரு முக்கிய அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்தேர்வுகள் மூலம் நிரப்பபட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் கொரோனா கால கட்டத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தார்கள். தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது.
TCS, Wipro & காக்னிசண்ட் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH? ஆய்வு தகவல்!
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. மேலும் வேதியியலர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு மார்ச் 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இத்தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன் | உடனே பாருங்க..!
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு மையத்தை குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, TNPSC தேர்வாணையத்தால் வருகிற மார்ச் 19 தேதி அன்று நடைபெற உள்ள வேதியியலர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். அத்துடன் நிர்வாக காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.