தமிழகத்தில் மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை நெல்லை, தூத்துக்குடியை தொடர்ந்து தற்போது தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும், சாதி பாகுபாட்டிற்கு எதிராகவும் போராடியவர்களுள் ஒருவர் அய்யா வைகுண்டர். இவரை மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமி தோப்பில் வைகுண்டர் தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் 4ம் தேதி இவரது அவதார தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சியளிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகைகள் வாங்கும் ஆர்வத்தில் மக்கள்!
Follow our Instagram for more Latest Updates
அதே போல மார்ச் 4ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா பதியில் இருந்து நேற்று சாமிதோப்பு தலைமைப்பதியில் இருந்து பேரணி நடத்தப்படும். நடப்பு ஆண்டு சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 191 – வது அவதார தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது தென்காசி மாவட்டத்திற்கும் மார்ச் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். அம்மாவட்டத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.