மார்ச் 25ம் தேதி வங்கி விடுமுறை அறிவிப்பு – உங்கள் ஊரிலுமா தெரிந்து கொள்ளுங்கள்?

0
மார்ச் 25ம் தேதி வங்கி விடுமுறை அறிவிப்பு - உங்கள் ஊரிலுமா தெரிந்து கொள்ளுங்கள்?

மார்ச் மாத வங்கி விடுமுறை அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் வரும் வாரம் திங்கட்கிழமை அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

மார்ச் மாதத்தில் வார இறுதி விடுமுறை நாட்களை தவிர்த்து பண்டிகைகள் காரணமாக அதிக விடுமுறை நாட்கள் வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணை பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாதத்தின் பாதி நாட்களை கடந்துவிட்ட நிலையில் இனி வரும் நாட்களில் வர உள்ள பண்டிகை மற்றும் திருவிழா போன்ற விடுமுறைகள் குறித்தான நினைவூட்டல் இப்பதிவின் மூலமாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி மார்ச் 25ஆம் தேதி ஆன வரும் திங்கட்கிழமை அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் (ஆபி மற்றும் தெலுங்கானா), இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் முன்னர் வங்கி விடுமுறை தினங்கள் குறித்து அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 54.81 லட்சம் பேர் வேலைக்காக பதிவு – அரசு வெளியிட்ட அறிக்கை!

விடுமுறை பட்டியல்:

மார்ச் 26- ஒடிசா, மணிப்பூர் மற்றும் பீகாரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
மார்ச் 27- பீகாரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
மார்ச் 29 – திரிபுரா, அசாம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
புனித வெள்ளி: மார்ச் 29

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!