தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – “மாணவர் மனசு” என்ற புகார் பெட்டி அறிமுகம்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - "மாணவர் மனசு" என்ற புகார் பெட்டி அறிமுகம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – “மாணவர் மனசு” என்ற புகார் பெட்டி அறிமுகம்!

தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

மாணவர் மனசு:

தமிழக பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்முறைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் கோவை பள்ளியில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அத்துடன் மேலும் சில பள்ளிகளில் புகார்கள் வர தொடங்கின. இதனால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டியை அமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு – 2022 ஜனவரி முதல் அமல்!

அதனை தொடர்ந்து 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் வருகிற டிசம்பர்-31ஆம் தேதிக்குள் “மாணவர் மனசு” என்ற பெயரில் புகார் பெட்டியை அமைக்குமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் அவர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ.2000 வீதம் ரூ.7.46 கோடி மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இப்புகார் பெட்டியை வாங்கி கொள்ளலாம். இந்த புகார் பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை திறந்து பார்த்து அதில் உள்ள புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை ஏற்படின் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் – ஓமைக்ரான் அச்சம்! முதல்வர் தகவல்!

அத்துடன் மாணவர்கள் நலன் கருதி அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழு சார்பில் மாதந்தோறும் கூட்டங்கள் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும். இதையடுத்து பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும். மேலும் இந்த புகார் பெட்டியை கட்டாயமான முறையில் அனைத்து பள்ளிகளிலும் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!