தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு – 2022 ஜனவரி முதல் அமல்!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு - 2022 ஜனவரி முதல் அமல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு - 2022 ஜனவரி முதல் அமல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு – 2022 ஜனவரி முதல் அமல்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தமிழக கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து பல தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளின் பண்டகசாலை செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் போன்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் – ஓமைக்ரான் அச்சம்! முதல்வர் தகவல்!

இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைமுறை ஊதியம் வழங்கப்பட இருப்பதாக உத்தரவிடப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி தற்போது 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என அரசிடம் பல முறை கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு சிறப்பு குழுவின் பரிந்துரையின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி லாபத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?

அதே போல இந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5% ஊதிய உயர்வும், நஷ்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3% அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த துறை சார்ந்த ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளி போக்குவர்த்து படி, மருத்துவ காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலமாக ஏராளமான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!