தமிழகத்தில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில், “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை முதல்வர் இன்று (ஆகஸ்ட் 05) தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்துவம்:
தமிழகத்தில் புதிய முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய திட்டங்கள் அனைத்துமே, மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களது வீடுகளுக்கே நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை முதல்வர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி பகுதியில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா – 533 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு மாதந்தோறும் மருந்து மாத்திரை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்களும், நோயாளிகளும் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் நோயாளிகளின் நலன் கருதி “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டம் தமிழகம் முழுவதும் 7 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி வைத்தார். மேலும், மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர், காணொலி காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ஓசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைக்கிறார்.