இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா – 533 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 533 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தொடர் ஊரடங்கை அமலில் வைத்துள்ளது. மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது. இந்த நேரத்தில் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அறிவித்தது. ஆனாலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.
7, 8ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 9 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
அதனை தொடந்து இந்தியா முழுவதும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,12,114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூன்றாம் அலை கொரோனா வரும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பெருந்தொற்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மூன்றாம் அலை வருவதற்குள் நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதை அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,55,115 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 48,93,42,295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 533 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,26,290 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,726 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே போல் 4,11,076 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.