முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு? மாநில அரசு ஆலோசனை!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கினாலும், மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக வேகத்தில் பரவி வந்தாலும், கடந்த ஆண்டும் மக்கள் நெருக்கடி மிகுந்த மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக தொற்று பரவலில் முதல் இடத்தில் இருந்தது. நடப்பு ஆண்டிலும் அங்கு தான் தொற்று பரவல் அதிக உச்சத்தில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அங்கு தொற்று பரவல் பாதிப்புகள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் மாநிலம் முழுவதும் 40,956 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் மேற்கு பகுதியில் மட்டும் 793 இறப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், மும்பை நகரில் மட்டும் 1,171 பேர் நோய் தொற்று பாதித்தும், 51 பேர் உயிரிழந்து உள்ளனர். முன்னதாக ஏப்ரல் 14ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மே 15ம் தேதி வரையிலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மட்டும் தினமும் நான்கு மணி நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – கொரோனா தடுப்பு!!
இன்று மாலை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்க உள்ளது. மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீடிப்பது குறித்து அவர்கள் ஆலோசிக்க உள்ளனர். தொடர்ந்து இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகை வர இருப்பதால், கொண்டாட்டங்களை குறைத்து கொள்ளுமாறும் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்