10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – மாநில அரசு வெளியீடு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளதாக மாநில தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் – AICTE தலைவர் அறிவிப்பு!!
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் மட்டும் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது. தொற்றின் தாக்கம் சற்று குறைந்து இருந்ததால் கடந்த டிசம்பர் மாத இறுதியில் மாநிலத்தில் உள்ள பகுதிகளின் நிலையை பொறுத்து பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
பொதுத்தேர்வுகள்:
தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை மாநில தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 29 ம் தேதி முதல் மே 20ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்