மாவட்டம் முழுவதும் வார இறுதி முழு ஊரடங்கு அமல் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள் மீண்டுமாக அதிகரித்து வருவதாலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை உருவாகும் என்ற அச்சத்தாலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
முழு ஊரடங்கு
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை தொற்று பாதிப்பு மீண்டுமாக உயர்ந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மஹாராஷ்ரா அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்புகளின் படி, கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதால் மேற்கு மஹாராஷ்டிராவின் சதாரா, சாங்லி, கோலாப்பூர், சோலாப்பூர் மற்றும் அகமதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வார இறுதி முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
CISCE 10, 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு – கல்வி வாரியம் அறிவிப்பு!
முன்னதாக சாங்லி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 5 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 ஆம் தேதி முதல் சதாரா மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இது குறித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, திங்கள் முதல் வெள்ளி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாகவும் இந்த காலகட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உத்தரவு தொடரும். இது தவிர சதாராவில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சில தளர்வுகளின் படி,
- மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பால், இறைச்சி, முட்டை, மீன் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும்.
- மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தடுப்பூசி மையங்கள், மருத்துவ காப்பீட்டு அலுவலகங்கள், மருந்து நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
- இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அனைத்து வங்கி சேவைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில், மஹாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அன்று 9,489 புதிய பாதிப்புகள் மற்றும் 153 இறப்புகள் பதிவாகியுள்ளன. தவிர ஒரு நாளில் 8,395 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.