மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – பக்தர்களுக்கு அனுமதி!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருக்கல்யாண வைபவத்திற்கு பின்னர் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில்:
மதுரையில் புகழ்பெற்ற, பாரம்பரியமிக்க வழிபாடு தளங்களில் ஒன்றான மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அதன் முக்கிய வைபவங்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஒன்றாகும். இறுதி நிகழ்வாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் அந்த கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்வு மட்டும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் நடைபெற்றது. அதனை நேரலையில் பக்தர்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? ஏ.இ.பி.சி வேண்டுகோள்!!
இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை திருவிழாவும் நடைபெறாமல் தடை விதிக்கப்பட்டது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவவும் கடந்த ஆண்டை போலவே பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் கொரோனா முகாமாக மாற்றம் – கொரோனா தொற்று எதிரொலி!!
இதன்படி ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று காலை 8.30 மணி அளவில் கல்யாணம் நடைபெறும் போது மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதன் பின்னர் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும் போது ஆன்லைன் மூலமாக திருக்கல்யாணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடியேற்ற நடைபெறும் 15ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரையும் பின்னர் 11.30 மணி முதல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.