தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? ஏ.இ.பி.சி வேண்டுகோள்!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து வருவதால் இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு வேண்டாம் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு வேண்டாம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து அதனை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி திருவிழாவினை நடத்துமாறு அறிவுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என தகவல் பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை தற்போது வரை ஈடுகட்டி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் ஊரடங்கு வேண்டாம் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) மத்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழக கோவில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி – அறநிலைத்துறை உத்தரவு!!
அதில், “நாட்டின் முதுகெலும்பாக உள்ள சிறு குறு நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிறுவனங்கள் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள 1.30 கோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அந்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் எனவே ஊரடங்கு அமல்படுத்த வேண்டாம்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.