மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவ விழா – மார்ச் 27 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மிக பழமையான வழிபாட்டு தளமான மீனாட்சி அம்மன் திருக்கோவில் கோடை வசந்த உற்சவ விழா வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
கோடை வசந்த உற்சவ விழா
தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இருக்கிறது. இது தமிழக அரசின் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவில் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமைக் கொள்ளும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மதுரை முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
மெட்டாவில் வரவிருக்கும் புதிய பிளாட்ஃபார்ம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!
அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவ விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா வருகிற மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விழா நடைபெறும் நாட்களில் அம்மன் சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் பதிவு செய்யப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.