மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி (KVS, Madurai) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் PRT, PGT, TGT, Computer Instructor, Tamil Teacher போன்ற பல்வேறு பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.27,500/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி (KVS, Madurai) |
பணியின் பெயர் | PRT, PGT, TGT, Computer Instructor, Tamil Teacher, Coach, Special Educator, Educational Counsellor, Staff Nurse |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.02.2024, 24.02.2024, 25.02.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
கேந்திரிய வித்யாலயா பள்ளி காலியிடங்கள்:
PRT, PGT, TGT, Computer Instructor, Tamil Teacher, Coach, Special Educator, Educational Counsellor, Staff Nurse ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ளது.
KVS பணிக்கான கல்வி:
இப்பணிகளுக்கான நேர்காணலில் BE, B.Tech, B.Sc, M.Sc, BCA, MCA, Post Graduate Degree, B.P.Ed, M.P.Ed, D.P.Ed, Graduate Degree, Diploma, MA, M.com, B.Ed ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
KVS பணிக்கான வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
KVS ஊதியம்:
இந்த KVS பள்ளி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,750/- முதல் ரூ.27,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
மேலும் Staff Nurse பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.750/- ஒரு நாளுக்கான ஊதியமாக பெறுவார்கள்.
KVS தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 23.02.2024, 24.02.2024, 25.02.2024 ஆகிய தேதிகளில் காலை 8.30 மணி முதல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
KVS விண்ணப்பிக்கும் முறை:
இந்த KVS பள்ளி சார்ந்த பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணல் நடைபெறும் நாள் அன்று உடன் கொண்டு வந்து காலை 10.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.