மதுரை ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல் – ஆன்லைன் முன்பதிவு அவசியம்!
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பு ஆண்டில் நடக்க உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள மாடு பிடி வீரர்கள் ஆன்லைனில் கட்டாயம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு:
உலகம் முழுவதும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு நடப்பு ஆண்டில் நடத்தப்பட கூடாது என்று வழக்கம் போல் நீதிமன்றங்களில் எதிர்ப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பாரம்பரியத்தை நிலை நாட்டும் இத்தகைய போட்டிகளை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால், தமிழகத்தில் கடந்த 1 மாதமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில், நேற்று தமிழக அரசு காளைகளுடன் இருவர் மட்டுமே இருக்க வேண்டும், இதைத்தவிர அவர்கள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தற்போது மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.