தமிழகத்தில் அனுமதி பெறாமல் சிலைகளை வைக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் அனுமதி பெறாமல் சிலைகளை வைக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் அனுமதி பெறாமல் சிலைகளை வைக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் அனுமதி பெறாமல் சிலைகளை வைக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரன் என்பவரின் சிலையை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்தது. தற்போது இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

சிலைகள்:

விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் இமானுவேல் சேகரன் அவர்களின் வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முறையாக அனுமதி பெறாமலேயே இந்த சிலையானது கடந்த செப்டம்பர் 10ம் தேதி நிறுவப்பட்டது. இந்த நிலையில் இச்சிலையை முறையாக அனுமதி பெறும் வரை மூடி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால் இச்சிலை திறக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, எந்தவொரு சிலையை அமைக்கவும் அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால் மனு கொடுத்த சில நாட்களில் முறையாக அனுமதி பெறாமல் சிலையை திறந்து உள்ளதால் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி மீண்டும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 6% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதனை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் சிலைகளை வைக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக்கூடாது. மேலும் முன்னாள் முதல்வரின் சிலையை வைப்பதற்கு நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை. இதற்கு அதிகாரிகளிடம் தான் முறையாக அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் சிலை வைப்பதற்கு அனுமதி பெறும் வரை சிலையை திறப்பது, மரியாதை செய்வது கூடாது என தெரிவித்தனர். மேலும் இமானுவேல் சேகரன் அவர்களின் சிலையை வருகிற 19ஆம் தேதிக்குள் அகற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!