அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 6% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 6% அகவிலைப்படி உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 6% அகவிலைப்படி உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 6% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. அதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு அகவிலைப்படியை 6% உயர்த்தியுள்ளது.

அகவிலைப்படி :

இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு இரண்டாவது முறையாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. இதனையடுத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31% இருந்து 34% ஆக உயர்ந்தது.

Follow our Instagram for more Latest Updates

மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தீபாவளி பரிசாக தங்களது ஊழியர்களுக்கு அகவிலைபடியை 4% ஆக உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் ஐடி துறை.. 2 லட்சம் பேருக்கு வேலை – Infosys நிறுவனம் ஹாப்பி நியூஸ்!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% இருந்து வந்த நிலையில் தற்போது 6% உயர்த்தப்பட்டுள்ளதால் அகவிலைப்படி 34% ஆக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.15 கோடி நிதி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் MSRTC யின் கீழ் சுமார் 16,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது நாட்டின் மிக பெரிய பொது போக்குவரத்து கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!